Sunday, November 27, 2005

தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இராகங்கள்

சங்கீத சீசன் துவங்கி விட்டது. தமிழ்த் திரைப்படப் பாடல்கள் மூலம் கர்னாடக இசையின் இராகங்களை எப்படி இரசிப்பது என்ற எண்ணத்தில் "ராகசிந்தாமணி" என்ற தலைப்பில் (ஆங்கிலத்தில்) ஒர் புத்தகம் பதிப்பித்துள்ளேன். இதில் 1800 பாடல்கள் 160 இராகஙளில் வகைபடுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு இராகதிற்கும், ஆரோகணம், அவரோகணமும் மற்றும் பல சுவையான விஷயஙளும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு பக்கத்திலும் குவிஜ் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்ற 20ம் தேதி ஞாயிறு காலை பத்து மணியளவில் சென்னை, மயிலாப்பூரிலுள்ள பாரதீய வித்யா பவன் மினி அரங்கில் நடை பெற்றது. புத்தகத்தை வெளியிட்டவர்: வீணைக்கலைஞர். கலைமாமணி.திருமதி.ரேவதி கிருஷ்ணா அவர்கள். முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டவர். சன் தொலக்காட்சி செய்திகள்/சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சி நடத்தும் திரு.டி.எஸ்.ரங்கனாதன் அவர்கள்.

மேலதிக விபரங்களளுக்கு http://www.geocities.com/ragachintamani/ என்ற சுட்டியைச் சொடுக்கவும்.

மேற்கண்ட புத்தகம் கீழ்க்காணும் இடங்களில் கிடைக்கும்.

www.giritrading.com
www.kutcheribuzz.com
www.tkmbc.org
www.anyindian.com
www.sapthaswara.com
www.shanthitailors.com