Thursday, August 31, 2006

சார் கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா? - தேன்கூடு போட்டி

"குட் மார்னிங் சார்"

"குட் மார்னிங்"

"எது வரைக்கும் சார் போறீங்க?"

"கிண்டி ஸ்டேஷன் வரைக்கும். என்ன விஷயம்?"

"சார் எனக்கு அலெக்சாண்டர் ஸ்கொயர் வரைக்கும் போகணும்"

"ஓ"

"அங்கே, இன்னிக்கி ஒரு இன்டெர்வியூ"

"ஒகே. ஆல் த பெஸ்ட்"

"சார்..."

"என்ன?.."

"கொஞ்சம் லிப்ட் கொடுக்க முடியுமா?. நானே நடந்து போகலாமுன்னுதான் பார்த்தேன். நேத்திக்கி கால்ல ஒரு சுளுக்கு ஆகி விட்டது. டாக்டர் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துக்கச் சொல்றாரு. ஆனா, இன்னிக்கின்னு பாத்து இந்த இன்டெர்வியூ. இது எனக்கு முக்கியமான இன்டெர்வியூ சார். ப்ளீஸ் லிப்ட் கொடுங்க சார்.

"!!! ??? @@@ ####"

"அட்லீஸ்ட், இந்த ரோடு எண்ட் வரைக்கும் லிப்ட் கொடுத்தால் போதும் சார்"

"@@@ (((((( !!!! @@@"

"சார் பாஸ்ட்டா நடக்காதீங்க சார். உப்பு மூட்டை தூக்கிறது ரொம்பக் கஷ்டம் ஒண்ணுமில்லே சார். ப்ளீஸ். என்னை முதுகிலே உப்பு மூட்டையாத் தூக்கிட்டுப் போய் இந்த ரோடு எண்ட்லே விட்டுடுங்க சார்"

"ஏன் சார் ஒடறீங்க. சார்... சார்'

(முன்னொரு நாள் ராஜ் டி.வியில் பார்த்த gag type நிகழ்ச்சியிலிருந்து)

- சிமுலேஷன்

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 03 - கீரவாணி

தமிழ்த் திரையிசையிலே அதிகம் பயன்படுத்தப்பட்ட இராகங்களில் கீரவாணியும் ஒன்று. கீரவாணி, திரைப்படத் இசையமைப்பாளர்கள் மட்டுமின்றி, எந்த ஒரு இசைக் கலைஞருக்கும் பிடித்த இராகமாகும். இதனை மேல் நாட்டு இசையிலே, "ஹார்மோனிக் மைனர் ஸ்கேல்" (Hamonic Minor Scale) என்று கூறுவார்கள். சிம்மேந்திர மத்தியம் என்ற இராகத்திற்கும், கீரவாணிக்கும், மத்தியமம் மட்டுமே வித்தியாசமாகும். கீரவாணியில் சுத்த மத்தியமும் (ம1), சிம்மேந்திர மத்திய இராகத்திற்கு பிரதி மத்யமும் (ம2) வரும். தமிழ்த் தியாகைய்யர் எனப்படும், பாபநாசம் சிவன் அவர்களின், "தேவி நீயே துணை" என்ற பிரபலமான கீர்த்தனை, கீரவாணியில் அமைந்ததாகும்.

ஜனரஞ்சகமான கீரவாணி இராகத்தினை, எந்த ஒரு சூழ்நிலைக்கும் அழகாகப் பயன்படுத்த முடியும். உதாரணமாக, சின்னத் தம்பியின், 'போவோமா ஊர்கோலம்', ஒரு மகிழ்ச்சியான பாடலாகும். ஆனால், இதே இராகத்தினை, அபூர்வ சகோதரர்கள் படத்தில், 'ஒன்னை நெனெச்சேன், பாட்டுப் படிச்சேன்' என்ற பாடலில் சோகம் ததும்பும் விதத்தில் வடித்திருப்பார்கள். கேளடி கண்மணியில், எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடி அசத்திய. 'மண்ணில் இந்தக் காதல் அன்றியும்' கீரவாணிதான். எத்தனையோ பாடல்கள் இருந்தாலும், கீரவாணியை உடனே இனம் கண்டு கொள்ள ஒரு பாடல் வேண்டுமென்று யாராவது கேட்டால் இருக்கவே இருக்கிறது, பொன்னு மணியின், 'நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு'. பாடல் படமாக்கப்பட்ட விதமும், பாடலின் மெலடியும், கீரவாணியைத் தூக்கி நிறுத்துகின்றன.

இராகம்: கீரவாணி
21ஆவது மேளகர்த்தா இராகம் (72 தாய் இராகங்களில் ஒன்று)
ஆரோகணம்: ஸ ரி2 க2 ம1 ப த1 நி3 ஸ
அவரோகணம்: ஸ நி3 த1ப ம1 க2 ரி2 ஸ

இப்போது பட்டியலைப் பார்ப்போம்

பாடல் - திரைப்படம்

01. ஆடாத மனமும் - மகாதேவி
02. ஆகாயத் தாமரை - நாடோடிப் பாட்டுக்காரன்
03. ஆலமரம் வேலமரம் - செந்தூரம்
04. ஆலாபனை செய்யும் மாலைப் பொழுது - பொன் மேகலை
05. அந்த வானத்தப் போல - சின்னக் கவுண்டர்
06. அரிதாரத்தப் பூசிக்கொள்ள - அவதாரம்
07. ஆயிரம் கோடி சூரியன் போலே - கரிசக்காட்டுப் பூவே
08. பூபாளம் இசைக்கும் - தூரல் நின்னு போச்சு
09. சந்தா ஓ சந்தா - கண்ணெதிரே தோன்றினாள்
10. சின்ன மணிக் குயிலே - அம்மன் கோயில் கிழக்காலே
11. தெய்வம் தந்த வீடு - அவள் ஓரு தொடர்கதை
12. எங்கே செல்லும் இந்தப் பாதை - சேது
13. எங்கே சென்று தேடுவேன் - ஞான சௌந்தரி
14. எங்கிருந்தோ என்னை அழைத்ததென்ன - க்ஷத்ரியன்
15. என்னைக் காணவில்லையே - காதல் தேசம்
16. என்னைத் தாலாட்ட வருவாளோ - காதலுக்கு மரியாதை
17. என்னுள்ளே என்னுள்ளே - வள்ளி
18. எவனோ ஒருவன் வாசிக்கிறான் - அலை பாயுதே
19. கூட்ஸ் வண்டியிலே - குங்குமச் சிமிழ்
20. ஹைவேஸ்ஸிலே ஸ்பீட் பிரேக்கில்லே - மனசெல்லாம்
21. இதயம் போகுதே - புதிய வார்ப்புகள்
22. இதயமே இதயமே என்னை மறந்தது - ஜூலி கணபதி
23. இளவேனில் இது வைகாசி மாசம் - காதல் ரோஜாவே
24. இன்னிசை - துள்ளாத மனமும் துள்ளும்
25. கத போலத் தோணும் இது கதையும் அல்ல - வீரத் தாலாட்டு
26. கண்ணே இன்று கல்யாண - ஆணழகன்
27. காற்றில் எந்தன் கீதம் - ஜானி
28. கீரவாணி கீரவாணி - பாடும் பறவைகள்
29. குங்குமக் கோலம் - அண்ணன் ஒரு கோயில்
30. குயிலே குயிலே உந்தன் கீதங்கள் - காதல் ஓவியம்
31. குயிலுக்கு கூ கூ கூவிட - ·ப்ரண்ட்ஸ்
32. மால கருக்கலிலே - எங்க ஊரு காவக்காரன்
33. மலரே தென்றல் பாடும் ஞானம் - வீட்டுல் விசேஷங்க
34. மலர்களிலே ஆராதனை - கரும்பு வில்
35. மலையோரம் வீசும் காத்து - பாடு நிலாவே
36. மாமனோட மனசு - உத்தம ராசா
37. மன்றம் வந்த தென்றலுக்கு - மௌன ராகம்
38. மனிதா மனிதா இனி உன் விழிகள் - கண் சிவந்தால் மண் சிவக்கும்
39. மஞ்சப் பொடி தேய்க்கையிலே - செண்பகமே செண்பகமே
40. மஞ்சள் பூசும் - ப்ரண்ட்ஸ்
41. மண்ணில் இந்தக் காதல் - கேளடி கண்மணி
42. முன் பனியா - நந்தா
43. முன்னம் செய்த தவம் - வனஜா கிரிஜா
44. நடந்தால் இரண்டடி - செம்பருத்தி
45. நான் புடிச்ச கிளியே - ராசுக்குட்டி
46. நான் தேடிய - எங்கே எனது கவிதை
47. நீ எங்கே என் அன்பே - சின்னத் தம்பி
48. நீதானே நீதானே - தாலாட்டுப் பாடவா
49. நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு - பொன்னுமணி
50. நேரமிதே நேசன் குணவிலாசன் - ராஜகுமாரி
51. நிலா அது வானத்து மேலே - நாயகன்
52. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - நெஞ்சில் ஒரு ஆலயம்
53. நினைவுகள் நெஞ்சினில் - ஆட்டோக்ரா·ப்
54. ஓ ஊர்வலம் - மாநகரக் காவல்
55. ஒ பாப்பா லாலி - இதயத்தைத் திருடாதே
56. ஒம்காரமாய் விளங்கும் நாதம் - வணங்கா முடி
57. ஒன்னை நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன் - அபூர்வ சகோதரர்கள்
58. ஊரத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் - படிக்காதவன்
59. ஒரிடந்தனிலே நிலை இலா உலகினிலே - வேலைக்காரி
60. ஒரு காதல் தேவதை - சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
61. ஒரு கிளி உருகுது - ஆனந்தக் கும்மி
62. ஒரு முத்துக்கிளி - தாயம்மா
63. ஒரு துளிர் ஒண்ணு அரும்புது - தொடரும்
64. பாடிப் பறந்த கிளி - கிழக்கு வாசல்
65. பாடும் வானம்பாடி - நான் பாடும் பாடல்
66. பாட்டுப் பாட வா பார்த்துப் பேச வா - தேன் நிலவு
67. பெண்ணொருத்தி - ஜெமினி
68. பூ முடியும் - வெள்ளிக் கிழமை விரதம்
69. பூங்காற்றே இனி போதும் - படிச்ச புள்ள
70. பூங்காற்றிலே உன் சுவாசத்தை - உயிரே
71. பூங்கொடிதான் பூத்தாடாதாம்மா - இதயம்
72. பூப்பூக்கும் மாசம் தை மாசம் - வருஷம் பதினாறு
73. போவோமா ஊர்கோலம் - சின்னத் தம்பி
74. ராஜராஜ சோழன் நான் - ரெட்டை வால் குருவி
75. ராசாத்தி மனசிலே - ராசாவே உன்னை நம்பி
76. ரோட்டோரம் பாட்டுச் சத்தம் - என் மன வானில்
77. சலாம் குலாமு - ஹலோ
78. சிறு சிறு சிறகுகளில் - கொஞ்சிப் பேசலாம்
79. சிட்டுப் பறக்குது குத்தாலத்தில் - நிலவே முகம் காட்டு
80. சொல்லத்தான் நினைக்கிறேன் - சொல்லத்தான் நினைக்கிறேன்
81. சுத்தாதே பூமித்தாயே நில் - நிலவே முகம் காட்டு
82. தளுக்கி தளுக்கி - கிழக்கு வாசல்
83. தங்கச் சங்கிலி - தூரல் நின்னு போச்சு
84. துளியோ துளி முத்துத் துளி - காதலிக்க நேரமில்லை
85. உன் குத்தமா என் குத்தமா - அழகி
86. உன் நெஞ்சத் தொட்டு சொல்லு - ராஜாதி ராஜா
87. உன்னை நான் அறிவேன் - குணா
88. உன்னை நினைக்கவே - ஜே ஜே89. உரு மாறி வந்து - விஜயகுமாரி
90. வானம் அதிரவே - ரமணா
91. வானத்திலிருந்த்து குதிச்சி வந்தேனா - பூந்தோட்டம்
92. வெண்ணிலவுக்கு வானத்த - தாலாட்டு பாடவா
93. வெற்றிக் கொடி கட்டு - படையப்பா
94. எவனோ ஒருவன் - அலை பாயுதே

கீரவாணி இராகம் ரொம்பப் பிடித்துப் போயிற்றோ என்னமோ தெரியவில்லை. மரகதமணி என்ற இசையமப்பாளர், கீரவாணி என்ற பெயரிலும் வலம் வந்தார். அழகன் படத்தின் அழகான பாடல்களைக் கொடுத்தவர் இவரே. அம்சலேகா என்பவரும் இவரா என்று தெரியவில்லை.

ஜீவா வெங்கட்ராமன் என்பவரும் இந்த இராகத்தைப் பற்றி வலையில் பதிந்துள்ளார். http://jeevagv.blogspot.com/2005/05/blog-post.html

கிரணாவளி என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த இராகத்தைச் சிலர் ஸ்டலாக, கிர்வானி என்றும் அழைப்பதுண்டு.

By the way, Dumb Sharad எனப்படும் ஊமை விளையாட்டில், கீரவாணி என்ற பெயர் வந்தால் என்ன அபிநயம் செய்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?

- சிமுலேஷன்.