Friday, January 05, 2007

பாட்டுக் கேட்கப் போனார்...படம் வரைந்து வந்தார்

இசை விழாக்களுக்குச் செல்லும் பலரும், கச்சேரிகளைக் கேட்பது மட்டுமின்றி, அரட்டை அடிப்பது, கேன்டீனில் ரவுண்டு கட்டுவது போன்ற இன்ன பிறவும் செய்வதுண்டு. ஆனால், ஆள்வார்ப்பேட்டை சீத்தம்மா காலனியைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற தணிக்கை அதிகாரியும், வருமானவரி ஆலோசகருமான வி.சுப்பிரமணியன், புதுமையான பொழுதுபோக்கு ஒன்றினை வைத்துள்ளார்.

கச்சேரிகளுக்கு செல்லும் போது, வெற்றுத்தாள்களும், வண்ணப் பென்சில்களும் கொண்ட ஒரு 'கிட்'டினை எடுத்துச் செல்கிறார். வசதியான ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு, பாட்டுக்களை இரசித்துக் கொண்டே, இசைக் கலைஞர்களை வரைந்து தள்ளுகின்றார். கச்சேரி முடிவதற்குள்ளாகவே, வண்ணமும் அடித்து, முடிவில் அந்தந்த இசைக் கலைஞர்களிடம், தான் வரைந்த படத்தினைக் காண்பித்து ஆட்டோகிராஃபும் வாங்கி விடுகின்றார். இதனால் எல்லா இசைக் கலைஞர்களிடமும், இவருக்கு நன்கு பரிச்சயமுண்டு. இந்த வருட இசை விழாவில் இவர் வரைந்த சில படங்களை இங்கே காணலாம்.


01. ப்ரவசனக் கலைஞர் விசாகா ஹரி

02. ஓ.எஸ்.அருண் மற்றும் குழுவினர்

03a. மஹதி
03b. கர்னாடிகா சகோதரர்கள் சசிகிரண் & கணேஷ்

04. சாருலதா மணி
05. காயத்ரி கிரீஷ்

06. சரஸ்வதி வாக்கியேயக்காரா டிரஸ்ட் நிறுவனர் என்.வி.எஸ்

07. சங்கீதக் கலாநிதி டி.என்.கிருஷ்ணன்

08a. ஐஷ்வரியா வித்யா ரகுநாத்
08b. வி.சங்கர நாராயணன்

09. மதுரை சுந்தர்

10a. ஆர்.பாலசுப்ரமணியன்
10b. டி.கே.கோவிந்தராவ்

11. புல்லாங்குழல் என்.ரமணி மற்றும் குழுவினர்

12. சவிதா நரசிம்மன்

13. சுகுணா புருஷோத்தமன்


14. சிக்கில் குருசரண்

இவரது 'அனைவரையும் கவரும் ஹரிதாஸ் பஜன்' படத்தினைக் காண இங்கே சொடுக்கவும்.

- சிமுலேஷன்