Thursday, October 15, 2009

சிமுலேஷன் கவிதைகள்

சிமுலேஷன் கவிதைகள்

வசரமாய் ஆட்டோவில் பறந்தாலும்,
படகுக் காரில் பவனி வந்தாலும் பாதியில் நிறுத்தித் துப்பு.
பன்றிக் காய்ச்சல் பரப்பு.
-----0-----

நாலு படமும் நாற்பது நாள் ஓடியது;
நடிகர் பொழப்பு நாறிப் போச்சு;
பாலபிஷேகம், பீரபிஷேகம்.
-----0-----

“‘கேக்கை எடுத்து முகத்தில் அடிப்பது கேவலமா இருக்கு!
ஆசிட் முட்டை அடித்து விளையாடலாமா?” கேட்டது,
சீரியல் பார்க்கும் சித்தியின் பேத்தி.
-----0-----

ஜாமூன், ஜாங்கிரி,
வறுவல், பொரியல், துவையல்.
எச்சில் இலைகள்.
-----0-----

நில்,
கவனி,
பிச்சை போடு,
செல்.
-----0-----

“கடை விரித்தேன்;
கொள்வாரில்லை”
விளம்பரம் செய்தாயா?
-----0-----

ழ்துளைக் கிணறுகள் வெட்ட,
அதில் விழும் குழந்தைகளை மீட்க
அமைச்சகம் ஒன்று அமைப்போமா?
-----0-----
றிவியலுக்கு ஒரு முகம்
ஆன்மீகத்திற்கு ஒரு முகம்
அனானியாய் எழுத ஒரு முகம்
குஜாலாய் எழுத ஒரு முகம்
கும்மியடிக்க ஒரு முகம்
அலுப்பாயிருக்குதமிழ் வலையுலகம்.
-----0-----
- சிமுலேஷன்