Sunday, November 22, 2009

எம்.எஸ்.உதயமூர்த்தியும் தம்பிதுரையும்

80கள். சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. மேதினக் கூட்டம். சிறப்பு அழைப்பாளர்கள் எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை அவர்களும். எம்.எஸ்.உதயமூர்த்தி தனது உரையில் வழக்கம் போல் வாழ்க்கையின் வெற்றிக்கு உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவை எப்படித் தேவை என்றும், எப்படி மக்கள் தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் ஊக்கம் தரும் உரை ஒன்றினை நிகழ்த்தினார்.

அடுத்து பேச வந்த தம்பிதுரை அவர்கள், "ஐயா சொன்னதை அப்படியே நம்ப வேண்டாம். எல்லாத்துக்கும் மேல தேவையானது அதிர்ஷ்டம். அதிர்ஷ்டத்தை நம்பணும். எனக்கு அந்த அதிர்ஷடம் இருந்தது. அதனாலதான் எங்கியோ இருந்த என்னை, இந்தியாவின் நாலாவது குடிமகனாக, எம்.ஜி.ஆர் உக்காத்தி வைச்சார்.", என்றார்.

- சிமுலேஷன்

ஆதித்யா-அனிருத்

ஆதித்யா- அம்மா, இவனைப் பாருங்கோ! என் கண்ணைக் குத்திட்டான்.

அம்மா - ஏண்டா அனிருத், அவன் கண்ணைக் குத்தினே?

அனிருத் - இல்ல அம்மா, கன்னத்லே அறையத்தான் போனேன்; நகந்துன்ட்டான்; அதனாலதான் கண்ணுலெ விரல் பட்டுருத்து.

--------------
அம்மா - அனிருத், அவன் உனக்கு அண்ணா. இனி மேல பேர் சொல்லிக் கூப்பிடக் கூடாது. அண்ணான்னுதான் கூப்பிடணும், தெரியறதா?

அனிருத் - சரிம்மா.

ஆதித்யாவைத் தனியாகத் தள்ளிக் கொண்டு போய், "யேய். இனிமே நீயும் என்னைத் தம்பின்னுதான் கூப்பிடணும் தெரியுமா?