Monday, December 21, 2009

சென்னை இசை விழா 2009-2010

முதலில் சென்னை இசை விழாவிற்கென ஒரு தனிப்பதிவு தொடங்கி, இசை விமர்சனங்கள் எழுதலாமென நினைத்தாலும், அதற்கென நேரம் கிடைக்கவில்லை. அதனால் ஒரு புகைப்படப் பதிவு மட்டுமே! புகைப்ப்டங்கள் மட்டும் அவ்வப்போது தரவேற்றம் செய்யும் எண்ணம்.

இந்த வருடத்திற்கான் நான் கேட்ட முதல் கச்சேரி சாகேத ராம். சிவகாமி பெத்தாச்சி அரங்கினில், ப்ரம்மகான சபா ஆதரவில்.


நாரதகான சபாவில் கலாக்ஷேத்ரா குழுவினரின் குழு நடனங்கள்.


குழு நடனத்தின் மற்றொரு காட்சி.


குழு நடனத்தின் மற்றுமொரு காட்சி. கலாக்ஷேத்ரா குழுவிலுள்ள ஆண்கள், பெண்களைப் போலல்லாமல், ஆண்களைப் போலவே ஆடுவார்கள். இந்த முறை, இந்தக் குழுவினர் சிறப்பாக தீம் எதனையும் எடுத்துக் கொள்ளாமல், எல்லா உருப்படிகளிலும் கொஞ்சம் கலந்து, நங்கநல்லூர் பஞ்சாம்ருதம் ஆக்கி விட்டார்கள்.

மியூசிக் அகாடெமியில் "ப்ருகதேசி" என்ற தலைப்பில் லெக்டெம் நடத்திய அனில் பேஹார்.


இந்த வருடத்தின் சங்கீதக் கலாநிதி வலையப்பட்டி ஆர்.சுப்பிரமணியன் அவர்கள், மியூசிக் அகாடெமி பப்புவுடன்.

இசைவல்லுனர் T.R.சுப்பிரமணியன்


இசைவல்லுனர் S.R.ஜானகிராமன்


மயிலை பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் நடைபெற்ற அபிஷேக் ரகுராம் கச்சேரி.

அதே மயிலை பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் ம்றுநாள் காலை 5.30 மணிக்கு நடைபெற்ற கணேஷ்-குமரேஷ் வயலினிசைக் கச்சேரி. நிகழ்ச்சிக்கான வெளிச்சமே இவ்வளவுதான். அதிகாலையில் அகல் விளக்கொளியில் நடைபெற்ற இந்தக் கச்சேரியினைக் கேட்டவர்கள் பெற்றது ஒரு மறக்க முடியாத அனுபவம்.

டாக்டர்.ரீதா ராஜா நடத்திய லெக்டெம்.

முதன்முறையாக மியூசிக் அகாடெமியில், கர்நாடக இசையின் கமலஹாசன் T.M.கிருஷ்ணா லெக்டெம் நடத்தியபோது அரங்கம் நிரம்பி வழிந்ததில் ஆச்சரியமொன்றுமில்லை.


சிவகாமி பெத்தாச்சி அரங்கினில் பாடிய குல்தீப் பய்.

"ஸரளி வரிசை முரளிகாச்சு; ஜண்டை வரிசை கொண்டைக்காச்சு" என்று சரணத்தில் துவக்கி, ஒரு வித்தியாசமான பாட்டு ஒன்று பாடினார். (ஊத்துகாடோ?)



என்னை கவர்ந்த இளம் பாடகர்கள் திருச்சூர் சகோதரர்கள். சுசரிதா RTP செம அசத்தல். மேலும் விவரங்களுக்கு லலிதாராமின் விரிவான் விமர்சனப் பதிவினைப் பார்க்கவும்.

மியூசிக் அகாடெமியின் முக்கிய இடமான கேண்டீன்.



பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் என்னக் கவர்ந்த பாலகன் ஒருவன்.

அப்புறம், இந்த சீசனில் சந்திப்போம் என்று எதிர்பார்த்த மூத்த பதிர்வர் ஒருவரை எதிர்பாராதவிதமாக சந்தித்தேன். அவர்..............



V

V

V

V

V

V

V

V

V

V

V

V

V

V

V


- சிமுலேஷன்