Thursday, September 29, 2011

கொலு வைப்பது எப்படி?

கடந்த சில நாட்களில் நவராத்திரி கொலு குறித்து ஒன்பது பதிவுகள் இட்டிருந்தேன். அதனைப பற்றிய ஒரு சுருக்கம் இங்கே.

முதல் பதிவில் கொலு குறித்த ஒரு அறிமுகம் கொடுக்கப்பட்டது.

இரண்டாவது பதிவில் கொலுவுக்கு முன்னதாக வாங்க வேண்டியவை குறித்து விளக்கப்ட்டது.

மூன்றாம் பதிவில் கொலு வைக்கும் அறையில் செய்ய வேண்டியவைகள் குறித்தும் மற்றைய ஏற்பாடுகள் குறித்தும் கூறப்பட்டது.

நான்காம் பதிவில் படி கட்டிக் கொலு வைக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது.

ஐந்தாம் பதிவில் கொலுவில் பூங்கா, தெப்பக் குளம் போன்றவை செய்து எப்படி மதிப்புக் கூட்டுவது என்று கூறப்பட்டது.

ஆறாம் பதிவில் தீமாட்டிக் கொலு குறித்து விளக்கப்பட்டது.

ஏழாம் பதிவில் கொலுவுக்கு அழைக்கும் முறையும், பூஜை செய்வது குறித்தும் விளக்கப்பட்டது.  

எட்டாம் பதிவில் கொலுப் போட்டிகள் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது.

ஒன்பதாம் பதிவில் கொலு முடிந்தவுடன் கவனத்தில் கொள்ள வேண்டியவை விளக்கப்பட்டது.

நவராத்திரியின் போது கொலு வைக்கும் அனைவருக்கும் இந்தப் பதிவுகள் பயனுள்ளதாக இருந்திருக்குமென்று நம்புகின்றேன்.

-       சிமுலேஷன்

கொலு வைப்பது எப்படி? - 09

கொலு முடிந்தவுடன் செய்ய வேண்டியவை
கொலு முடிவடைந்த மறுநாளே எல்லாப் பொம்மைகளையும் எடுத்து விடாமல் ஓரிரு நாட்கள் கழித்து எடுத்தால் நமக்கும் ஓய்வு கிட்டும். நவராத்திரியின் போது வர முடியாத சில விருந்தினர்களும் வந்து பார்க்க வசதியாக இருக்கும். எடுத்து வைக்கும்போது சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் அடுத்த முறை எளிதாக கொலு வைக்க முடியும். 

அதாவது பொம்மைகளை மண் பொம்மை, பீங்கான பொம்மை, பேப்பர் மேஷ் என்று ரகம் வாரியாகப் பிரித்து வத்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை பழைய நாளிதழ்கள் கொண்டு கவனமாகச் சுற்ற வேண்டும். துணியால சுற்றினால் எலி வந்தது கடிக்கும் வாய்ப்பு உள்ளது. பின்பு அவற்றை அட்டைப் பெட்டியில் அடுக்க வேணடும்.  தேவைப்ப்பட்டால் இந்த அட்டை பெட்டிக்குள் பேப்பர் கட்டிங் துகள்களையும் இட்டு நிரப்பி பொம்மைகள் உடையாமல் பார்த்துக் கொள்ளலாம். அட்டை பெட்டியின் வெளியில் ஒரு மார்க்கர் பேனா கொண்டு உள்ளே என்னென்ன பொம்மைகள் வைத்திருக்கின்றோம் என்று எழுதி வைத்து விடுதல் வசதியாக இருக்கும். ஸ்லாடட் கொலுப் படிகளை கழட்டும் முன்னர் எந்த படி எந்த ஆங்கிளில் எத்தனையாவது ஸ்லாட்டில் பொருத்தப்பட்டுள்ளது என்று மார்க்கர் பேனாவில் குறித்து வைக்க, அடுத்த முறை படிகள் கட்டுவது எளிதாகும்.  

வருடா வருடம் புதுப் பொம்மைகள் வாங்குபவராக இருந்தால் வீட்டில் பொம்மைகள் எக்கச்சக்கமாக சேர்ந்து ஒரு நேரத்தில் கையாளுவது கடினமாக இருக்கும். எனவே வருடா வருடம் ஒரு சில பொம்மைகளையாவது வசதியற்ற ஏழைக் குழந்தைகளுக்கு பரிசாக அளிக்கலாம்.

-       நிறைந்தது

- சிமுலேஷன்

கொலு வைப்பது எப்படி? - 09

கொலு முடிந்தவுடன் செய்ய வேண்டியவை
கொலு முடிவடைந்த மறுநாளே எல்லாப் பொம்மைகளையும் எடுத்து விடாமல் ஓரிரு நாட்கள் கழித்து எடுத்தால் நமக்கும் ஓய்வு கிட்டும். நவராத்திரியின் போது வர முடியாத சில விருந்தினர்களும் வந்து பார்க்க வசதியாக இருக்கும். எடுத்து வைக்கும்போது சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் அடுத்த முறை எளிதாக கொலு வைக்க முடியும். 

அதாவது பொம்மைகளை மண் பொம்மை, பீங்கான பொம்மை, பேப்பர் மேஷ் என்று ரகம் வாரியாகப் பிரித்து வத்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றை பழைய நாளிதழ்கள் கொண்டு கவனமாகச் சுற்ற வேண்டும். துணியால சுற்றினால் எலி வந்தது கடிக்கும் வாய்ப்பு உள்ளது. பின்பு அவற்றை அட்டைப் பெட்டியில் அடுக்க வேணடும்.  தேவைப்ப்பட்டால் இந்த அட்டை பெட்டிக்குள் பேப்பர் கட்டிங் துகள்களையும் இட்டு நிரப்பி பொம்மைகள் உடையாமல் பார்த்துக் கொள்ளலாம். அட்டை பெட்டியின் வெளியில் ஒரு மார்க்கர் பேனா கொண்டு உள்ளே என்னென்ன பொம்மைகள் வைத்திருக்கின்றோம் என்று எழுதி வைத்து விடுதல் வசதியாக இருக்கும். ஸ்லாடட் கொலுப் படிகளை கழட்டும் முன்னர் எந்த படி எந்த ஆங்கிளில் எத்தனையாவது ஸ்லாட்டில் பொருத்தப்பட்டுள்ளது என்று மார்க்கர் பேனாவில் குறித்து வைக்க, அடுத்த முறை படிகள் கட்டுவது எளிதாகும்.  

வருடா வருடம் புதுப் பொம்மைகள் வாங்குபவராக இருந்தால் வீட்டில் பொம்மைகள் எக்கச்சக்கமாக சேர்ந்து ஒரு நேரத்தில் கையாளுவது கடினமாக இருக்கும். எனவே வருடா வருடம் ஒரு சில பொம்மைகளையாவது வசதியற்ற ஏழைக் குழந்தைகளுக்கு பரிசாக அளிக்கலாம்.

-       நிறைந்தது

- சிமுலேஷன்