Sunday, December 27, 2015

அறநிலையத் துறை சுற்றறிக்கை


ஜீன்ஸ், லெகிங்ஸ், டிரவுசர் போன்ற ஆடைகள் அணிந்து வருபவர்களை பாரம்பரியமிக்க கோயில்களுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அறநிலையத் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த ஆடைக் கட்டுப்பாடு வரும் ஜனவரி 1-ம் தேதி அமலுக்கு வருகிறது.



உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெற்றியில் திருநீறோ, குங்குமமோ, சந்தனமோ, திருமண்ணோ இட்டுக் கொள்வது என்பது இந்துப் பாரம்பரியத்தின் முக்கிய அடையாளம். எனவே, இந்துக் கோயிலுக்கு வருபவர்கள், ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, நெற்றியில்  திருநீறோ, குங்குமமோ, சந்தனமோ, திருமண்ணோ இட்டுக் கொண்டு வராவிடில் அனுமதி இல்லை  என்றும் சொல்லலாம்.