Monday, July 07, 2008

உங்கள் உறவினர் பயணம் செய்து கொண்டிருக்கும் விமானம் கடத்தப்பட்டுவிட்டதா?

  • உங்கள் உறவினர் பயணம் செய்து கொண்டிருக்கும் விமானம் கடத்தப்பட்டுவிட்டதா?அவர் சீக்கிரம் விடுதலையாகி பத்திரமாக வீடு திரும்ப நீங்கள் சாப்பிட வேண்டிய மருந்துகள் ரெட்செஸ்ட்நட், ராக்ரோஸ், ராக் வாட்டர் மற்றும் ஸ்வீட் செஸ்ட்நட்.
  • உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் (IC Unit), “இப்போது ஏதும் சொல்ல முடியாது”, என்று டாக்டர்கள் கைவிட்ட கேசுகளில் (மூளையில் இரத்தப் பெருக்கு, மூன்றாவது ஹார்ட் அட்டாக்) நோயாளிகளின் நெருங்கிய உறவினர்கள் ரெட்செஸ்ட்நட், ராக்ரோஸ், ஸ்வீட் செஸ்ட்நட் மற்றும் கார்ஸ் ஆகிய நான்கு மருந்துகளையும் சேர்த்து (2-4 மணிக்கோர் தடவை) நோயாளி விரவில் குணமாகி விடுவார்.
  • கடவுளால் உண்டாக்கப்பட்ட பணம் இல்லாவிட்டாலும், கடன் வாங்கியாவது தீபாவளி கொண்டாட வேண்டும் என்பது நியதி. கடவுள் நமக்கு நிறைய கொடுக்கத்தானே வேண்டும்? பண்டிகக்குச் செலவு செய்யும்படி வைத்தால் அந்தப் பணம் திரும்பக் கிடைக்கும்படி செய்ய வேண்டுமல்லவா? ஆனால், நடைமுறையில் அவ்வாறு நடப்பதில்லை. இஃது ஏனெனில் பண்டிகையை எப்ப்டிக் கொண்டாடுவது எப்படி என நமக்குத் தெரியாமல் போய்விட்டதுதான். “வாட்டர் வயலட்” என்ற மலர் மருந்து, தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பும், பின்பும் ஒரு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர, தீபாவளிக்குச் செலவழித்த பணம் எதோ ஒரு விதத்தில் 1-3 மடங்காக திரும்பி வருவது பலரது அனுபவம்.
  • வயது வந்த பெண்ணிற்கு திருமணம் செய்ய நினைக்கும் பெற்றோர்கள் ஸ்வீட் செஸ்ட்நட் என்ற் மலர் மருந்து சாப்பிட்டு வர. 1-2 மாதங்களில் “வரதட்சிணை வேண்டாம். உங்கள் பெண்தான் வேண்டும்” என நல்ல குணம் அமைந்த நிறைய சம்பாதிக்கும் பையனின் பெற்றோர்கள் வலிய வந்து பெண் கேட்பார்கள். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சியக்கபடுகின்றன. பெண்ணிற்கு வரன் தேடி, வீடு வீடாக ஏறிச் சென்று “என் பெண்ணை பார்க்க வாருங்கள்” என நமது மூளையை உபயோகித்துச் செயல்படுவதால், சொர்க்கம் செய்யும் வேலைக்குத் தடங்கல் செய்கின்றோம். அதனால் சரியில்லாத பையனுக்கு திருமணம் செய்து கொடுத்து, பெற்றோரும் அப்பெண்ணும் காலம் பூராவும் கஷ்டத்திலே நொந்து போகின்றனர்.
  • ஒரு பஸ்ஸை, ஒரே நேரத்தில் இரண்டு டிரைவர்கள் (ஸ்டீரிங்கைப் பிடித்து) ஓட்டினால் விபத்துதான் நிகழும்.பெற்றோர்கள் ஸ்வீட் செஸ்ட்நட் சாப்பிட்டு வர, மாப்பிள்ளை தேடும் விஷயத்தில் மட்டும் அம்மருந்து நமது மூளையை நிறுத்தி வைத்துவிடுவதால், சொர்க்கம் தனது வேலையை சுலபமாகச் செய்துவிடுகிறது. (The Beach remedy Chestnut switches off our mind so that heaven can a free play in selecting the right boy and sending him to the girl’s house)
  • திருமணம் நிச்சியமானவுடன், இம்மருந்தை பெண்ணின் பெற்றோர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, திருமண செலவுக்கான பணம் நிறைய வந்து கொண்டே இருக்கும். (ஆனால் நீங்கள் நினைக்கும் விதத்தில் அல்ல) இது எப்படி?

    சொர்க்கத்தில் உள்ல கடவுள் திருமணத்தை நிச்சியிகின்றார் எனில், அந்தக் கடவுலள் திருமண செலவுக்கு நிறையப் பணம் அனுப்பித்தானே ஆக வெண்டும். ஆனால், நிஜ வாழ்க்கையில் அவ்வாறு எவருக்கும் நடைபெறவில்லையே என அங்கலாய்க்கும் நபர்களைப் பார்த்து, “ஸ்வீட் செஸ்ட்நட் மருந்து சாப்பிட்டுப் பாருங்கள்” என இயற்கை அறைகூவல் விடுக்கிறது.

    “ஸ்வீட் செஸ்ட்நட் சாப்பிடுவதால் என்ன நடக்கிறது? திருமண வைபவத்திற்கு நாம் “திட்டமிடுதம்” மனதில் செயலை மாத்திரம் இம்மருந்து நிறுத்தி விடுவதால் (switch off) கடவுள் நம் மூலமாக வேலை செய்வது தங்கு தடையின்றி நடைபெற்றுவிடுகிறது.

    “எட்வர்ட் பாட்ச்” என்ற இலண்டன் மாநகர மருந்துவர் கண்டுபிடித்த “மலர் மருந்துகள்” பற்றித் தமிழ் வார இதழ் ஒன்றில் வந்த விளம்பரம்தான் இது.

    மேற்கண்ட விபரங்களைத் தெரிந்து கொண்ட வலைப்பதிவர்கள், “மலர் மருந்துகள்” சாப்பிட்டால் இன்னும் என்னென்ன நன்மைகள் விளையலாம் என்று தோன்றும் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே.
- சிமுலேஷன்

Saturday, July 05, 2008

கரம்சந்த் காந்தியும் கறி முயல்களும்

நாங்கள் உங்களுக்கு உயர்ரக முயல்கள் தருகின்றோம். அது போடும் குட்டிகள் 4 மாதம் கழித்து, 3 கிலோ வந்ததும் கிலோ நூறு ரூபாய் வீதம் அனைத்துக் குட்டிகளையும் உயிருடன் உங்கள் இடத்திலேயே வந்து, எடை போட்டு எடுத்துக் கொள்கின்றோம்.

மேலும் ஈமு கோழிகளையும் நாங்கள் தருகின்றோம். நீங்கள் பெற்று அதை முறையாக வளர்க்க வேண்டும். அது போடும் முட்டைகளை, ஒரு முட்டை 1500 ரூபாய் வீதம் நாங்களே உங்களிடமிருந்து பெற்றுக் கொள்கின்றோம். இதனுடைய கறி உயிருடன் எடை போட்டு கிலோ 800 வீதம் உங்கள் இடத்திலேயே வந்து பெற்றுக் கொள்கின்றோம்.

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளத் தேவையான இடம்:
மகாத்மா காந்தி அறக்கட்டளை

பிரபல வார இதழ் ஒன்றில் சமீபத்தில் பார்த்தது மேற்கண்ட விளம்பரம்.

- சிமுலேஷன்

சிறுகதை எழுதுவது எப்படி? - சுஜாதா - நூல் விமர்சனம்

ஒரு அரிய வாய்ப்பு. நீங்கள் நல்ல சிறுகதைகள் எழுத விரும்புகிறீர்களா? குமுதம், விகடன், குங்குமம், சாவி, இதயம், கல்கி போன்ற முன்னணி இதழ்களில் உங்கள் சிறுகதைகள் பிரசுரமாக வேண்டுமா? சுஜாதாவிடம் கற்றுக் கொள்ளத் தொடர்பு கொள்ளுங்கள். த. பெட்டி எண்: 2355.

சமீபத்தில் இந்த விளம்பரத்தை தினமணியில் பார்த்திருப்பீர்கள். இரண்டாம் பக்கத்தில் ஒரு ஒரத்தில் ஏல விளம்பரம், கோர்ட்டு நோட்டீஸ் இதுக்கெல்லாம் மத்தியிலே பொடி எழுத்திலே வந்தது.

மேற்கண்ட இந்த விளம்பரத்தைப் பார்த்த ஓல்ஸோல் மிளகாய் மற்றும் வெல்ல வியாபாரியான ஏகாம்பரத்தின் இதயம் ஒரு தடவை துடிக்கிறதை நிறுத்திட்டு நின்று போய் அப்புறம் படபடவென்று அடிச்சுகிச்சி.

ஆசிரியருக்குக் கடிதத்தில் “காமத்தீ என்ற கதைக்கு ஜெயராஜ் படம் ரொம்ப ஓவர் ஸார்! ச.ராஜரத்தினம்”, என்ற ஒரு கடிதமும், “பராசக்தியாரே! கருணை பெரியதா? காதல் பெரியதா?”ன்னு ஒரு கேள்வி-பதில் மட்டுமே எழுதி அனுபவம் பெற்றிருந்த “அரச மணி’ என்ற புனை பெயரும் கொண்ட ராஜரத்தினம் என்ற பாத்திரத்தின் மூலம், “சிறுகதை எழுதுவது எப்படி?” என்ற சூத்திரத்தை அழகாக விளக்குகின்றார் வாத்தியார் சுஜாதா. எண்பதுகளில் வத்திருந்த காரணத்தினால், “சுஜாதா சிறுகதைப் பட்டறை” என்ற ஒரு அமைப்பு இருந்தது கூடப் பலருக்கும் தெரிந்திருக்காது.

விசா பப்ள்கேஷன்ஸ் வெளியிட்டுள்ள இந்தத் தொகுப்பின் விலை ரூபாய் 50 தான்.

- சிமுலேஷன்