ரதிபதிப்ரியா என்ற ராகமானது நடபைரவி ராகத்தின் ஜன்யமாகும். இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-
ஆரோகணம்: S R2 G2 P N2 S
அவரோகணம்: S N2 P G2 R2 S
வெங்கடகிரியப்பா என்பவர் இந்த ராகத்தினை அறிமுகப்படுத்தியதாகத் தெரிகின்றது. இந்த ராகம், ஆலாபனை செய்யும் வண்ணம் அமைந்த ஒரு பெரிய ராகமாக இல்லாததால் இன்றும் அபூர்வமாகவே கையாளப்பட்டு வருகின்றது.
கனம் கிருஷ்ண ஐயர் இயற்றி, எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடிய "ஜகஜனனீ" என்ற பாடல் ரதிபதிப்ரியா ராகத்தில் அமைந்த்த ஒரு முக்கியமான பாடலாகும். அந்தக் காலத்தில் சங்கீதம் தெரிந்தவர்களில், இந்தப் பாடலைத் தெரியாத தமிழர்களே இல்லை என்று சொல்லலாம். இந்தப் பாடலை ஸ்ரீராம் கங்காதரன் பாடுவதை இப்போது பார்க்கலாம்.
இதே ராகத்தில், இதே மெட்டினில், "சிவகவி" படத்தில் தியாகராஜ பாகவதர் பாடும் "மனம் கனிந்தே" என்ற பாடலை இங்கே கேளுங்கள்.
MMDயைய்ம், MKTயையும் விட்டால் நேராக இளையராஜா காலத்திற்குத்தான் வரவேண்டும், மீண்டும் ஒரு முறை ரதிபதிப்ரியாவினைக் கேட்க. ஆமாம். சிந்துபைரவியில் வரும் "ஆனந்த நடனம்" என்ற ஒரு சிறிய பாடல் இந்த ராகத்தில் அமைந்துள்ளது.
கல்கி அவர்கள் இயற்றி, எம்.எஸ் அவர்கள் பாடிய புகழ்பெற்ற பாடல், "காற்றினிலே வரும் கீதம்", மீரா படாத்தில் இடம் பெற்றது. இந்தப் பாடல் ரதிபதிப்ரியா ராகத்தில் அமைந்துள்ளது என்று பெரும்பாலானோர் சொல்லுகின்றனர். சிலர் "இல்லை. இதில் அன்னிய ஸ்வர்ன்ங்கள் வருகின்றன. இது சிந்துபைரவியின் ஒரு வெர்ஷன்ட்தான்", என்று சொல்லுகின்றனர். கேட்டுத்தான் பார்ப்போமே.
கர்நாடக இசையினில் ஏதும் கீர்த்தனைகள் இல்லாவிட்டாலும், எனது பேவரைட் ட்ரையோ (கடம் கார்த்திக், எம்பார் கண்ணன், கீபோர்ட் சத்தியா) இந்த ரதிபதிப்ரியா போன்ற அபூர்வ ராகங்களில் ஆலாபனை செய்யத் தயங்கியதே இல்லை. அதில் ஒன்றினை இப்போது கேட்போம்.
மற்றைய அபூர்வ ராகங்கள் குறித்த எனது பதிவினை இங்கே பார்க்க்கலாம்/கேட்கலாம்.
- சிமுலேஷன்
ஆரோகணம்: S R2 G2 P N2 S
அவரோகணம்: S N2 P G2 R2 S
வெங்கடகிரியப்பா என்பவர் இந்த ராகத்தினை அறிமுகப்படுத்தியதாகத் தெரிகின்றது. இந்த ராகம், ஆலாபனை செய்யும் வண்ணம் அமைந்த ஒரு பெரிய ராகமாக இல்லாததால் இன்றும் அபூர்வமாகவே கையாளப்பட்டு வருகின்றது.
கனம் கிருஷ்ண ஐயர் இயற்றி, எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடிய "ஜகஜனனீ" என்ற பாடல் ரதிபதிப்ரியா ராகத்தில் அமைந்த்த ஒரு முக்கியமான பாடலாகும். அந்தக் காலத்தில் சங்கீதம் தெரிந்தவர்களில், இந்தப் பாடலைத் தெரியாத தமிழர்களே இல்லை என்று சொல்லலாம். இந்தப் பாடலை ஸ்ரீராம் கங்காதரன் பாடுவதை இப்போது பார்க்கலாம்.
இதே ராகத்தில், இதே மெட்டினில், "சிவகவி" படத்தில் தியாகராஜ பாகவதர் பாடும் "மனம் கனிந்தே" என்ற பாடலை இங்கே கேளுங்கள்.
MMDயைய்ம், MKTயையும் விட்டால் நேராக இளையராஜா காலத்திற்குத்தான் வரவேண்டும், மீண்டும் ஒரு முறை ரதிபதிப்ரியாவினைக் கேட்க. ஆமாம். சிந்துபைரவியில் வரும் "ஆனந்த நடனம்" என்ற ஒரு சிறிய பாடல் இந்த ராகத்தில் அமைந்துள்ளது.
கல்கி அவர்கள் இயற்றி, எம்.எஸ் அவர்கள் பாடிய புகழ்பெற்ற பாடல், "காற்றினிலே வரும் கீதம்", மீரா படாத்தில் இடம் பெற்றது. இந்தப் பாடல் ரதிபதிப்ரியா ராகத்தில் அமைந்துள்ளது என்று பெரும்பாலானோர் சொல்லுகின்றனர். சிலர் "இல்லை. இதில் அன்னிய ஸ்வர்ன்ங்கள் வருகின்றன. இது சிந்துபைரவியின் ஒரு வெர்ஷன்ட்தான்", என்று சொல்லுகின்றனர். கேட்டுத்தான் பார்ப்போமே.
கர்நாடக இசையினில் ஏதும் கீர்த்தனைகள் இல்லாவிட்டாலும், எனது பேவரைட் ட்ரையோ (கடம் கார்த்திக், எம்பார் கண்ணன், கீபோர்ட் சத்தியா) இந்த ரதிபதிப்ரியா போன்ற அபூர்வ ராகங்களில் ஆலாபனை செய்யத் தயங்கியதே இல்லை. அதில் ஒன்றினை இப்போது கேட்போம்.
மற்றைய அபூர்வ ராகங்கள் குறித்த எனது பதிவினை இங்கே பார்க்க்கலாம்/கேட்கலாம்.
- சிமுலேஷன்