Sunday, July 03, 2011

அபூர்வ ராகங்கள்-07 - ரதிபதிப்ரியா - Rathipathipriya

ரதிபதிப்ரியா என்ற ராகமானது நடபைரவி ராகத்தின் ஜன்யமாகும். இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்:     S R2 G2 P N2 S

அவரோகணம்: S N2 P G2 R2 S

வெங்கடகிரியப்பா என்பவர் இந்த ராகத்தினை அறிமுகப்படுத்தியதாகத் தெரிகின்றது. இந்த ராகம், ஆலாபனை செய்யும் வண்ணம் அமைந்த ஒரு பெரிய ராகமாக இல்லாததால் இன்றும் அபூர்வமாகவே கையாளப்பட்டு வருகின்றது.

கனம் கிருஷ்ண ஐயர் இயற்றி, எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடிய "ஜகஜனனீ" என்ற பாடல் ரதிபதிப்ரியா ராகத்தில் அமைந்த்த ஒரு முக்கியமான பாடலாகும். அந்தக் காலத்தில் சங்கீதம் தெரிந்தவர்களில், இந்தப் பாடலைத் தெரியாத தமிழர்களே இல்லை என்று சொல்லலாம். இந்தப் பாடலை ஸ்ரீராம் கங்காதரன் பாடுவதை இப்போது பார்க்கலாம்.



இதே ராகத்தில், இதே மெட்டினில், "சிவகவி" படத்தில் தியாகராஜ பாகவதர் பாடும் "மனம் கனிந்தே" என்ற பாடலை இங்கே கேளுங்கள்.



MMDயைய்ம், MKTயையும் விட்டால் நேராக இளையராஜா காலத்திற்குத்தான் வரவேண்டும், மீண்டும் ஒரு முறை ரதிபதிப்ரியாவினைக் கேட்க. ஆமாம். சிந்துபைரவியில் வரும் "ஆனந்த நடனம்" என்ற ஒரு சிறிய பாடல் இந்த ராகத்தில் அமைந்துள்ளது.



கல்கி அவர்கள் இயற்றி, எம்.எஸ் அவர்கள் பாடிய புகழ்பெற்ற பாடல், "காற்றினிலே வரும் கீதம்", மீரா படாத்தில் இடம் பெற்றது. இந்தப் பாடல் ரதிபதிப்ரியா ராகத்தில் அமைந்துள்ளது என்று பெரும்பாலானோர் சொல்லுகின்றனர். சிலர் "இல்லை. இதில் அன்னிய ஸ்வர்ன்ங்கள் வருகின்றன. இது சிந்துபைரவியின் ஒரு வெர்ஷன்ட்தான்",  என்று சொல்லுகின்றனர். கேட்டுத்தான் பார்ப்போமே.



கர்நாடக இசையினில் ஏதும் கீர்த்தனைகள் இல்லாவிட்டாலும், எனது பேவரைட் ட்ரையோ (கடம் கார்த்திக், எம்பார் கண்ணன், கீபோர்ட் சத்தியா) இந்த ரதிபதிப்ரியா போன்ற அபூர்வ ராகங்களில் ஆலாபனை செய்யத் தயங்கியதே இல்லை. அதில் ஒன்றினை இப்போது கேட்போம்.






மற்றைய அபூர்வ ராகங்கள் குறித்த எனது பதிவினை இங்கே பார்க்க்கலாம்/கேட்கலாம்.

- சிமுலேஷன்

ஃபலூடா பக்கங்கள்-01



பறவைகளுக்கும் தாகம் உண்டு

போட் கிளப் ரோடு அருகே ஆர்ச் பிஷப் மத்தியாஸ் அவின்யூ என்ற நிழற்சாலையில் ஒரு மரத்தினடியில் ப்ளூ கிராஸ் அமைப்பினர் வெயில் காலத்தில் பறவைகளுக்கென்று ஒரு நீர்த் தொட்டி வைத்துள்ளனர். என்ன ஒரு கரிசனமான ஒரு காரியம்.




தென்னந் தோப்பு தேவதையும் கேட்பரி நிறுவனமும்

ஒரு காலத்தில் தூர்தர்ஷனில் வரும் "வயலும் வாழ்வும்; நிகழ்ச்சியினை பெரிதும் விரும்பிப் பார்ப்பேன். அரிய பல விஷயங்கள் சுவையாக இருக்கும். அதே போலத் தற்போது மக்கள் டி.வியில் மலரும் பூமி என்ற பகுதியில் "தென்னந் தோப்பு தேவதை" என்ற நிகழ்ச்சி ஒளீபரப்பாகின்றது. இதன் ஸ்பான்ஸர் யாரென்றால் Cadbury நிறுவனத்தினர். Cadbury நிருவந்துக்கும் க்கும் இந்த விவசாயம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்தால்,  இந்த வீடியோவில் இருக்கின்றது விடை.





ஞானி அங்கீகரித்த ஆபாசம்




சமீபத்தில் ஒரு எழுத்தாளர் புத்தகம் ஒன்றினைப் பரிசளித்தார். என் மேல் என்ன கடுப்போ தெரியவில்ல. "விருந்து"என்ற தலைப்பு கொண்ட நாவலை எழுதியவர் அலிடாலியா ராஜாமணி, ப்ரியாராஜ் என்ற பெயர்களில் எழுதி வரும் கட்டளை வெங்கட்ராமன் ராஜாமணி என்ற நபர்.   'கதை எப்படி?' என்று ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் "உவ்வே" ரகம். ஒரு குறிப்பிட்ட சாதியினர் மீது வன்மம் கொண்டு எழுதப்பட்ட கதையென்றால் மிகையில்லை. இதில் நான் மிகவும் நொந்த விஷயம் என்னவென்றால், இந்த நாவலை மிகவும் சிலாகித்து "ஞாநி" முன்னுரை எழுதியிருப்பதுதான். ஞாநியின் மீதிருந்த மதிப்பு தடாலென்று இறங்கியது.

பற்கள் தேய்ந்த காரணம்

பல் மருத்துவரைப் பார்க்கச் சென்ற போது, "மேல்வரிசைப் பல்லின் விளிம்பு மட்டும் சற்றே தெய்ந்த்திருகின்றதே! ஒரு வேளை கால்ஷியப் பற்றாக் குறையாக இருக்குமோ?" என்றேன்.

"நகம் கடிக்கும் பழக்கம் உண்டோ" என்றார் டாக்டர்.

"அட. ஆமா."

- சிமுலேஷன்